ஜாஸ் ஆலுக்காஸ் நகைக்கடை விளம்பரம் பார்த்தவர்கள் இரண்டு விஷயங்களுக்காக அசந்து போயிருப்பார்கள். ஒன்று விஜய். இன்னொன்று அந்த சில நிமிட விளம்பரத்தில் அற்புதமான ஒரு கதையை சொன்ன விதம்!
ஒரு பள்ளிக்கூடத்திற்கு முன்பு தனது படகு காரில் வந்திறங்குவார் விஜய்
அப்போது அந்த பள்ளியில் படித்த சிறுவயது நினைவுகள் அவருக்குள் நிழலாடும். தான் செய்த ஒரு தவறுக்காக ப்யூன் ஒருவரை தலைமை ஆசிரியர் பிரம்பால் அடிப்பார். அப்போது கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியே வரும் சிறுவயது விஜய், 'அந்த தப்பை அவரு செய்யல. நான்தான் செஞ்சேன்' என்பார். அதோடு நினைவுகள் மறைய தனது கையால் அந்த பள்ளியில் மணியை அடிப்பார் விஜய். அப்போது தனது செயலுக்காக அடிவாங்கிய அந்த பியூன் வயதான தோற்றத்தில் து£ரத்திலிருந்து வருவார். விஜய்யை கட்டியணைத்துக் கொள்ளும் அவர் கண்கலங்க, ஒரு பரிசுப் பொருளை அவர் கையில் திணித்துவிட்டு சின்ன புன்னகையுடன் காரில் ஏறி சென்றுவிடுவார்.பிரமிப்பு விலகாத ப்யூன் தனது கையை திறந்து அந்த பரிசுப்பொருளை கவனிக்கிறார். ஜாஸ் ஆலுக்காசின் விலை உயர்ந்த வைர மோதிரம்! இப்படி போகிறது அந்த விளம்பரம்.
இதில் அந்த ப்யூனாக நடித்திருப்பவர் பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியிருக்கும் காசி. இந்த விளம்பர படத்தின் இயக்குனர் மனோஜ் பிள்ளையுடன் லொகேஷன் பார்க்க போயிருந்தாராம். பல இடங்களை அவருக்கு காட்டியவர் கடைசியாக ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் வெஸ்ட்லி பள்ளியை காண்பித்திருக்கிறார். அப்போது இந்த கண்ணாடியை போட்டுகிட்டு நடந்து வாங்க என்றாராம் மனோஜ். அப்படியே நடந்து வந்த காசியிடம் நீங்கதான் இந்த கேரக்டர்ல நடிக்கிறீங்க என்று கூற இன்ப அதிர்ச்சி காசிக்கு.
இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு திரையுலகத்தினர் பலரும் பெரிய கேரக்டர்களில் நடிக்க அழைக்கிறார்களாம். 'என் முதல் படமே விஜய்யுடன் நடிச்சது பெரிய மகிழ்ச்சி என்று புல்லரிக்கிறார் காசி. மொத்தம் இரண்டு நாட்கள் நடந்த அந்த படப்பிடிப்பில் விஜய்யே முன் வந்து 'காசியண்ணே, இப்படி நடந்து வாங்க. அப்படி லுக் கொடுங்க' என்று சொல்லிக் கொடுத்ததுதான் அதைவிட பெரிய மகிழ்ச்சி' என்கிறார் காசி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment