தற்போது கோடம்பாக்கத்தில் புதிதாக ஒரு வதந்தி உலா வந்து கொண்டிருக்கிறது. “3 இடியட்ஸ்” பற்றிய செய்திதாங்க அது. ஆமாங்க… காதும் காதும் வச்ச மாதிரி கசியும் இந்த நியூஸ் பற்றி கவலைப்படத் தேவையில்லை விஜய் மற்றும் ஷங்கரின் ரசிகர்கள்.
ஏனென்றால் “3 இடியட்ஸ்” தற்போது ட்ராப்பானாலும...் விஜய்யுடன் இணைந்து தனது பயணத்தை தொடரப் போகிறாராம் ஷங்கர்.
எந்திரன் படத்தை விநியோகம் செய்தது ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம்தான். இவர்களிடம்தான் “3 இடியட்ஸ்” படத்தின் உரிமை உள்ளது. இந்த படத்துக்காக முக்கால் கிணறு தாண்டியிருந்தார்கள் ஷங்கரும் மற்றும் அவரது இயக்கத்தில் நடிக்க தயாராக இருந்த ஹீரோக்களும். இந்த நிலையில்தான் திடீரென்று தனது தயாரிப்பு முயற்சியை தள்ளிப் போட்டிருக்கிறது ஜெமினி.
விஜய்யின் தேதிகளை வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று முடிவெடுத்த ஷங்கர் அதிரடியாக ஒரு படத்தை தர முடிவெடுத்திருப்பதாக தகவல். இந்த படத்தை ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பதாகவும் செய்திகள் கசிகிறது. நமக்கே இப்படி ஒரு செய்தி கசியும்போது படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்த ஜீவாவுக்கு தெரியாதா ?
ஷங்கரின் படத்தில் நடிக்கிறோம் என்ற சந்தோஷத்திலிருந்தவர், இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவசரம் அவசரமாக சென்று விஜய்யை சந்தித்திருக்கிறார். இருவரும் என்ன பேசினார்கள் ? என்ன முடிவெடுக்கப்பட்டது என்பதெல்லாம் நாளையோ… மறுநாளோ வெளியே தெரியக் கூடும்.
எது எப்படியோ… 3 இடியட்ஸ் பற்றிய வதந்திகளுக்கு கோடம்பாக்கத்தில் பஞ்சமில்லை. 3 இடியட்ஸ் பற்றி ஷங்கரோ… விஜய்யோ… இதுவரை வாய்திறக்கவில்லை. கூடிய விரைவில் அதற்கான முடிவுகிடைக்கும் என்பதே உண்மை.
Home »
» திடீர் சிக்கலில் த்ரி இடியட்ஸ்! ஷங்கரின் தனி ஆவர்த்தனம்!
திடீர் சிக்கலில் த்ரி இடியட்ஸ்! ஷங்கரின் தனி ஆவர்த்தனம்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment