Home » » விஜய் செய்த உதவியை வெளியில் சொன்னது ஏன்?-லாரன்ஸ் பேட்டி!

விஜய் செய்த உதவியை வெளியில் சொன்னது ஏன்?-லாரன்ஸ் பேட்டி!

நடிகர் விஜய் செய்த உதவியால் உயிர்பிழத்த சிறுவன் யஷ்வந்த் சென்னை புஷ்பா கார்டனில் “காவலன்” பட சூட்டிங்கில் இருந்த விஜய்யைச் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான். அவன் பெற்றோரும் விஜய்யின் கையை பிடித்துக் கொண்டு அழுதனர். இந்த சந்திப்பு மனதை உறுக்குவதாக இருந்தது. அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கூறி பத்திரமாக அனுப்பி வைத்தனர் விஜய்யும், லாரன்ஸும்.

பிறகு பேட்டியளித்த விஜய் கூறியதாவது :

லாரன்ஸ் மாஸ்டரை தொழிலுக்கு அப்பாற்பட்டும் எனக்கு பிடிக்கும். அவர் நிறைய குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார். நான் என் தங்கை வித்யா பெயரில் அறக்கட்டளை அமைத்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் செய்து வருகிறேன். இந்த சிறுவனின் நிலைபற்றி லாரன்ஸ் மாஸ்டர் என்னிடம் கூறியபோது உடனே உதவ வேண்டும் என்று தோன்றியது.


பணம் உதவிசெய்தது ஒரு பெரிய விஷயமேயில்லை. இப்போது இந்த சிறுவன் உயிர் பிழைத்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். இனி இவன் மற்ற சிறுவர்கள்போல் நன்றாக வாழமுடியும். இந்த உலகில் அவன் நிறைய சாதிக்கக்கூடும் என்றார் விஜய்.


லாரன்ஸ் கூறியதாவது :


இந்த சிறுவனின் பெற்றோர் என்னிடம் உதவிகேட்டு வந்ததும், எனக்கு விஜய் ஞாபகம் வந்தது. விஜய்யிடம் சொன்னால் உதவி செய்வார் என்று உடனே அவரிடம் சென்றேன். இந்த சிறுவனுக்கு உதவி செய்ததை வெளியில் சொல்லவேண்டாம் என்றுதான் விஜய் கூறியிருந்தார். ஆனால் நான்தான் இந்த சம்பவத்தை வெளியில் தெரியப்படுத்தினேன். இது போன்ற உதவிகள் வெளியில் தெரிந்தால்தான் மற்ற நடிகர்களும் வேறு யாருக்காவது உதவ முன்வருவார்கள். இப்போது இந்த சிறுவன் சந்தோஷமாக இருக்கிறான் என்றார் லாரன்ஸ்.

Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan