கோவையில் பள்ளிக் குழந்தைகள் 2 பேர் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கையொன்று வெளியிட்டுள்ளார். அதி்ல் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் மிக கொடூரமானது.
கடத்திக் கொன்ற அந்த டிரைவருக்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். வேலாயுதம் பட சூட்டிங்கிற்காக உடுமலை அருகே திருமூர்த்திமலை பகுதியில் முகாமிட்டுள்ள விஜய் இச்சம்பவம் குறித்து ஆவேமாக பேட்டியளித்துள்ளார்.
அவரது அறிக்கை விவரம் :

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. குழந்தைகளை கடத்தி கொலை செய்வது தான் உலகிலேயே மிக கொடூரமான குற்றம். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டங்கள் ஏற்படுத்தவேண்டும். இதை ஒரு நடிகனாக சொல்லவில்லை.
மனிதநேயமுள்ள கோடிக்கணக்கான மக்களின் மனக்குமுறலையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளேன். குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் மட்டுமே மருந்தாகிவிடாது. கடவுளால் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் வழங்கமுடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் விஜய்.
0 comments:
Post a Comment