Home » » ரசிகர்களின் ரகளை:வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய்

ரசிகர்களின் ரகளை:வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய்

ஈரோட்டில் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பாலாஜியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதில் நடிகர் விஜய் பங்கேற்றார். மணமக்களை வாழ்த்திய பிறகு, நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



ஆனால் திருமணம் நடந்த மகாராஜா கலையரங்குக்கு விஜய் வந்த சிறிது நேரத்திலேயே ரசிகர்கள் ரகளையில் இறங்கி கூச்சல் போட்டனர். விஜய்க்கு பாதுகாப்பு அரண் அமைப்பதாகச் சொல்லி ஆளாளுக்கு வளையம் போட்டதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நலத் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரிலேயே 30 நிமிடங்கள் காத்திருந்தார் விஜய். ஆனால், ரசிகர்கள் ரகளை அடங்காமல் தொடர்ந்ததால், போலீசார் நடிகர் விஜய்யை அங்கிருந்து கிளம்பி விடுமாறு அறிவுறுத்தினர்.


இதனால், நலத்திட்ட நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு விஜய் கிளம்பிச் சென்றார்.ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மீண்டும் கூச்சலில் இறங்கினர். நிகழ்ச்சியை ரத்து செய்ததற்காக விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் ஈரோடு ரசிகர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்குவதாக கூறியுள்ளார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan