
விழாவில் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.பி.சவுத்ரி, ஜெயம் ரவி, அருண் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிகுமார், என்.லிங்குசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னூறு படங்களுக்கு மேல் ஸ்டன்ட் மாஸ்டராக இருந்த கனல்கண்ணன், அவரே ஹீரோவாகிறார் என்றால் கதையிலும் அப்படிதானே ஃபயர் பறக்கும்? நம் நினைப்பில் நாலைந்து குத்துவிடுகிறார் கனல். இவர் இப்போது ஹீரோவாக நடிக்கும் சங்கரன் கோவில் படம் பற்றி விரிவாக பேச ஆரம்பித்தார். “எல்லாரும் அப்படிதான் நினைச்சுகிட்டு இருக்காங்க. இது அருமையான சென்ட்டிமென்ட், காதல் நிறைஞ்ச கதை. அதுக்காக நம்ம வழக்கமான ஸ்டைலை விட்டுக் கொடுக்க முடியுமா? ஃபைட்டும் இருக்கு”.
தன் தாய்க்கு ஏற்பட்ட களங்கத்தை அவளது மகன் எப்படி தீர்த்து வைக்கிறான் என்பது கதை. ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த நான், ஹீரோவாக நடிக்க காரணம் இப்படத்தில் அமைந்த கதையும், அதில் என் கேரக்டரும்தான். சென்டிமென்ட், காமெடி, ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சகமான படமாக இருக்கும். எனக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் தயங்கினர்.
முதன்முதல்ல ரூபிகாவை பார்த்தப்போ அவங்க இப்படத்தின் தயாரிப்பாளர்னு மட்டும்தான் நினைச்சிருப்பாங்க. நானும் சம்பள விஷயம், டேட்ஸ் போன்ற விஷயங்களை பேசிட்டு சென்னைக்கு வந்திட்டேன். ஷூட்டிங் அன்னைக்குதான் நான்தான் இந்த படத்தின் ஹீரோங்கிறதே அவங்களுக்கு தெரியும்.
அப்புறம் அதிர்ச்சியடைந்து என்ன பிரயோஜனம்? ஆனாலும் அவங்க அட்ஜஸ்ட் பண்ணி நடிச்சிட்டாங்க என்றார் கனல். ஆக்ஷன் காட்சிகளை என் உதவியாளர் டைகர் பாபு இயக்கியுள்ளார். பிரபு, நாசர், ரோஹிணி என்று பெரிய நடிகர் நடிகைகளும் கனல் கண்ணணுக்காக நடித்திருக்கிறார்கள்.
இல்லீகல் உறவால பிறந்த குழந்தை சமூகத்துல எப்படியெல்லாம் கஷ்டப்படுது என்பதுதான் இந்த கதையின் முக்கியமான முடிச்சு என்றார் படத்தின் டைரக்டர் பழனிவேல் ராஜன்.
0 comments:
Post a Comment