வெளியில் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள்.
ஆனால் அவர்களின் தலயும் தளபதியும் பண்டிகை - விசேஷங்களுக்கு கூடிக் குலவி நட்பு பாராட்டுகின்றனர்.
இரு நடிகர்களின் இப்போதைய மார்க்கெட் நிலவரமும் ஒன்றும் ஆரோக்கியமாக இல்லை. அரசியல் பற்றி இருவருமே பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இப்போது அதிமுக அனுதாபிகள் வேறு.

அதே நேரம் இருவருக்குமே ஒரு வெற்றி கட்டாயம் தேவை. அதற்காக மங்காத்தாவில் அஜீத் படுபிஸி. விஜய்யோ காவலனை முடித்து விட்டு, வேலாயுதத்தின் இறுதி ஷெட்யூலில் இருக்கிறார்.


இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் இப்போது சென்னை பின்னி மில்ஸில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் திடீரென்று அஜீத்தும் விஜய்யும் நேற்று சந்தித்துக் கொண்டனர். சில தனங்களுக்குமுன் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இருந்த தளபதி விஜய்யை, தல அஜீத் சந்திந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. தற்போது மீண்டும் ஒருமுறை இருவரும் சந்தித்துப்பேசியுள்ளது கோடம்பாக்கத்தில் பரவலாகப் பேசப்பட்டுவரும் ஹாட் செய்தி.
இந்த சந்திப்பின்போது இருவரும் சிறுதுநேரம் தனியாக மனம்விட்டு பேசிக்கொண்டிருந்தனர்.இருவரும் அவரவர் படம் குறித்து விசாரித்துக் கொண்டனர்.அப்போது அஜீத்திற்கு வாட்ச் ஒன்றை கிப்ட்டாக அணிவித்தார் விஜய்.
தல-தளபதி ரசிகர்களும் இப்பிடி ஒற்றுமையா இருங்கப்பா..
0 comments:
Post a Comment