சமீபத்தில் பின்னி மில்லில் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பும், மங்காத்தா பட ஷ§ட்டிங் நடந்தது. வேலாயுதம் யூனிட்டுக்கும் சேர்த்து எனது செலவில் பிரியாணி வழங்கப்படும் என்று கூறிவிட்டாராம் அஜீத்.
அப்படியே வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன் விஜய்யை போனில் அழைத்த அஜீத், தங்கச்சியையும் விருந்துக்கு கூட்டிட்டு வந்திருங்க என்றாராம். சொன்னபடியே திருமதி விஜய்யும் ஆஜர். விருந்து முடிந்தபின் இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார்களாம். அரசியல் நிலவரங்கள் குறித்துதான் அந்த பேச்சு நீடித்தது என்றாலும், "அரசியலுக்குள் நுழைந்தால் நிம்மதி போய்விடும்" என்று புத்திமதி சொன்னாராம் அஜீத்.
0 comments:
Post a Comment