Home » » பொன்னியின் செல்வனில் `பழுவேட்டரையர்` ஆக சத்யராஜ்

பொன்னியின் செல்வனில் `பழுவேட்டரையர்` ஆக சத்யராஜ்

நான் இப்போ வாங்குறது பென்ஷன்தான். சம்பளம் இல்ல என்று பளிச்சென்று பேசி, பலரையும் அடபோட வைத்தவர் சத்யராஜ். நிலைமை அப்படியிருந்தாலும், கதை கேட்டுதான் ஒப்புக் கொள்கிறார் படங்களை. அதிலும் சத்யராஜின் சமீபகால முடிவுகள் சபாஷ் போட வைக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் நண்பன், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்று அவரது வருங்கால படங்கள், வைப்பு நிதி ரேஞ்சுக்கு ஆரோக்கியமானவை. இதில் பொன்னியின் செல்வன் படத்தில் புத்தபிக்குவாக நடிக்கிறார் என்று முதலில் வந்த செய்திகளையெல்லாம் மறுக்கிறார் அவர். நானும் படிச்சேங்க அதையெல்லாம். அந்த படத்துல நான் நடிக்கிறேன். ஆனா புத்த பிக்குவா இல்லை. பெரிய பழுவேட்டரையர்ங்கிற கேரக்டர்ல. மணி சார் என்னை வரச்சொல்லி, சார் பெரிய பழுவேட்டரையரா நடிக்கிறீங்க. சம்மதமா என்றார். நான் சின்ன வயசிலே படிச்சது பொன்னியின் செல்வனை. அது பெரிய கேரக்டரா, சின்ன கேரக்டரான்னு கூட மறந்துட்டேன். ஆனால் நான் சொன்ன முதல் வார்த்தை சரி சார்னு சொன்னதுதான். ஏன்னா வரலாற்று சிறப்பு மிக்க இந்த படத்தில் நான் நடிக்கணும். அவ்வளவுதான். அது எவ்வளவு பெரிய கேரக்டரா இல்லைன்னாலும் பரவாயில்லை என்றார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan