இப்போதைக்கு விஜய்க்கு சினிமாதான் முக்கியம். அவர் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. எனவே விஜய் முழுநேர அரசியலுக்கு வரமாட்டார். அவருக்குப் பதிலாக நான் நேரடி அரசியலில் நான் பங்கேற்று வருகிறேன். என்று சொன்னார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகரன்.
ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் உள்ள உண்ணாவிரதம் இருந்தார் விஜய். அதன்பிறகு நாகைமீனவரை இலங்கை ரானுவம் அடித்துக் கொன்ற துயர நிகழ்வில் கொதிதெழுந்த விஜய், நாகப்பட்டினத்தில் மாபெரும் கண்டனகூட்டம் நடித்தில் அதில் தனது கன்னி அரசியல் உரையாற்றினார்.
அதன்பிறகு திமுக மற்றும் சன் டிவி தரப்பினர் விஜயின் படங்களை வெளியிடாமல் சிக்கல்களை உண்டு பண்ணினார்கள். இதனால் கடுப்பானா விஜய் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அதன் வெற்றிக்கு பகீரங்கமாக உதவிதன் மூலம் நேரடி தேர்தல் அரசியலில் இறங்கினார்.
ஆனால் இந்த நிகழ்வுகளுகெல்லாம் முன்பாக, தன்னை இளைஞர் காங்கிரஸில் இணைத்துக் கொள்ளும் முடிவுடன் ராகுல் காந்தியைச் சந்தித்தார். ஆனால் நீங்கள் நாற்பது வயதைத்தாண்டி விட்டீர்கள். நீங்கள் இளைஞர் அல்ல என்று விஜயை ஏற்றுக்கொள்ள மறுத்தாராம் ராகுல்.
இதனால் மத்திய அரசியல் மீதும் கடுப்பான விஜய் தற்போது காங்கிரஸ் அரசாங்கத்துக்கு பெரிய தலைவலியாக இருக்கும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத்தை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் விஜய்.
நாளை காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து தனது ரசிகர் பட்டாளத்துடன் டெல்லி கிளம்பும் விமானத்தில் டெல்லி சென்று இறங்கும் அவர், அங்கிருந்து ராம் லீலா மைதானம் செல்கிறார். பின்னர் அன்னா ஹாசரேவுடன் உண்ணாவிரத்தில் பங்கேற்கிறார். இந்த அதிரடி முடிவை விஜய் எடுத்திருப்பது பற்றியை செய்தியை நமக்கு உறுதிபடுத்தியுள்ளார் விஜயின் செய்தித் தொடர்பாளர்!
0 comments:
Post a Comment