அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ரஜினி ஆதரவு ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று 10-வது நாளாக அவரது போராட்டம் நீடித்தது.
நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகிவரும் இந்த போராட்டத்துக்கு, நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவை தெரிவித்து அறிக்கை விட்டு இருந்தார்.
அன்னா ஹசாரேயுடன் நடிகர் விஜய் சந்திப்பு நடிகர் விஜய் இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று டெல்லி சென்று ராம் லீலா மைதானத்தில் நடந்து வரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.
அன்னா ஹசாரேயை சந்தித்து அவர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மைதானத்தில் கூடியிருந்த திரளான மக்கள் கூட்டத்தில் பேச வந்தார். அவரை பார்த்ததும் கூட்டத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:- அன்னா ஹசாரே நடத்தி வரும் இந்த உண்ணாவிரதம் நம் தேச வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. 75 வயதிலும் 10 நாட்களாக அவர் இருக்கும் உண்ணாவிரதம் அவருடைய மனோ திடத்தை காட்டுகிறது.
இந்த நாட்டுக்காக, பொது மக்களின் நலனுக்காக அவர் மன உறுதியுடன் செய்து வரும் இந்த அறவழிப்போராட்டம் அவருடைய தேச பக்தியை இந்த உலகத்துக்கே உணர்த்துகிறது. ஊழல் வேரோடு ஒழிக்கப்பட வேண்டும் என்ற உணர்வை இந்த தேசம் முழுவதும் விதைத்து, மகத்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் அன்னா ஹசாரே. முக்கியமாக இளைஞர்கள், மாணவர்கள் இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் எழுச்சியுடன் பங்கு பெற்று வருகிறார்கள்.
மக்களிடையே மகத்தான எழுச்சியை ஏற்படுத்தியுள்ள அவரது இந்த போராட்டம், எந்த அரசியல் கட்சியின் ஆதரவும் இல்லாமல் நடைபெறுவது போற்றுதலுக்குரியது, பாராட்டுக்குரியது. ஒரு தமிழன் என்ற முறையில் அவரை நேரில் சென்று வாழ்த்த வேண்டும் என்று விரும்பினேன். அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து வந்து இந்த உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றதை நான் பெருமையாக கருதுகிறேன்.
அன்னாஹசாரேவுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டும். தொடர்ந்து அவர் பொதுநல சேவை செய்ய வேண்டும். இந்த மேடையில் அவருக்காக நான் வேண்டிக்கொள்வது இதுதான். என் மக்கள் இயக்கம்உறுதுணையாக இருக்கும் அவருடைய இந்த அறவழி போராட்டத்துக்கு என் மக்கள் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் பேசினார்.
0 comments:
Post a Comment