Home » » விஜய் எனக்கு தந்தது வாய்ப்பல்ல வாழ்க்கை: பேரரசு புகழாரம்

விஜய் எனக்கு தந்தது வாய்ப்பல்ல வாழ்க்கை: பேரரசு புகழாரம்

சினிமாவில் 15 ஆண்டுகள் போராடிய எனக்கு வாழ்க்கை தந்தவரே நடிகர் விஜய்தான் என்று டைரக்டர் பேரரசு புகழாரம் சூட்டியுள்ளார்.ஊர் பெயர்களில் படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பேரரசு.இவரது படத்தில் பஞ்ச் டயலாக்களுக்கு பஞ்சமே இருக்காது. இவரது படத்தில் பஞ்ச் டயலாக்களுக்கு பஞ்சமே இருக்காது.

டைரக்டர் பேரரசு ஈரோட்டில் நடந்த இசைப்பயிற்சி பள்ளி விழாவில் பங்கேற்று 250 ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பேரரசு, நாட்டரசன் கோட்டையில் இருந்து சென்னைக்கு சென்று சினிமாத்துறை வாய்ப்புக்காக 15 ஆண்டுகள் போராடினேன். அதற்கு பிரதிபலனாக முதல் படமே நடிகர் விஜய் படமாக அமைந்தது.

திருப்பாச்சி படத்தை இயக்க நடிகர் விஜய் தந்தது வாய்ப்பல்ல வாழ்க்கை. தற்போது திருத்தணி படத்தை இயக்கியுள்ளேன். இதில் பரத், ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர். அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

ஏற்கனவே திருப்பதி படத்துக்கு கதைக்காக மாநில விருது கிடைத்து. விரைவில் சிவகங்கை என்ற படத்தை இயக்கவுள்ளேன். அது நிச்சயம் விருதை பெற்று தரும், என்று கூறினார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan