
கோபம், பகலவன் என்று தலைப்புகள் மாறிக் கொண்டிருந்தனவே தவிர, இந்த பட விஷயத்தில் உருப்படியான ஒரு முன்னேற்றமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த சீமான், தனது கொள்கை லட்சியத்திற்காக இன்னும் அதிக நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் கடந்த 5 ந் தேதி சீமானை அழைத்தாராம் விஜய்.
ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தோடு விஜய்யை சந்தித்தார் சீமான். சுமார் மூன்று மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்ததாம். முடிவு என்ன என்பதை இருவரில் யாராவது ஒருவராவது வாய் திறந்தால்தான் தெரிந்து கொள்ள முடியும் போலிருக்கிறது.
0 comments:
Post a Comment