Home » » மனம் திறக்கிறார் ஹன்சிகா

மனம் திறக்கிறார் ஹன்சிகா

வேலாயுதம் திரைப்படத்தில் ஜெனிலியாவுடன் எந்த விதமான பொறாமையும் ஏற்படவில்லை என்று ஹன்சிகா கூறியுள்ளார்.

விஜய் நடிக்கும் வேலாயுதம் திரைப்படம் வருகிற தீபாவளியன்று திரையிடப்படுகிறது. இதில் கதாநாயகிகளாக ஹன்சிகாவும்,ஜெனிலியாவும் நடிக்கிறார்கள்.



படப்பிடிப்பில் ஹன்சிகாவிற்கும்,ஜெனிலியாவிற்கும் பொறாமைகள் ஏற்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

இதை இயக்குநர் ராஜாவும் உறுதிபடுத்தினார்.ஆனால் இதுபற்றி ஹன்சிகாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

நானும் ஜெனிலியாவும் நல்ல தோழிகள். எங்களைப்பற்றிய வதந்திகள் வெளியான போது நான் மிகவும் கவலையடைந்தேன்.

இயக்குநர் ராஜா வதந்தியை உறுதிபடுத்தியிருக்கிறார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை என்றார்.

தற்பொழுது நான் சித்தார்த்துடன் தெலுங்கு படத்திலும், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்திலும் நடித்து வருகிறேன் என்றார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan