கதாநாயகன் சிம்பு எப்போதுமே தன்னை ஒரு அஜீத்தின் ரசிகராக காட்டிக் கொள்பவர்.
விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதுகூட, நான் அஜீத் ரசிகன். விஜய் படத்தில் நடித்தால் என் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துவிட்டார்.
அப்படிப்பட்ட சிம்புவின் ஒஸ்தி பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராப் பங்கேற்று, இசைத்தட்டையும் வெளியிட்டார் விஜய். காரணம் விஜய்யின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான தரணி இயக்கியுள்ள படம் ஒஸ்தி என்பதுதான்.
இந்த இசை வெளியீட்டு விழாவின் இன்னொரு முக்கியமான விடயம் இயக்குநர் பாக்யராஜ் வந்து வாழ்த்தியதுதான். ஒரு காலத்தில் ரஜினி - கமல் ரேஞ்சுக்கு, பாக்யராஜ்- ராஜேந்தர் போட்டி பிரபலமாக இருந்தது.
பாக்யராஜை மேடைக்கு அழைத்ததும், அங்கே நின்று கொண்டிருந்த டிஆர் அருகில் நின்று கொண்டு ஒரு கேள்வி எழுப்பினார். ராஜேந்தருக்கும் அவர் மகன் சிம்புவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு தெரியுமா என்றார். கூட்டம் விழிக்க, ராஜேந்தர் எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் சிம்பு எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர், என்று கூற அரங்கில் விசில் பறந்தது.
0 comments:
Post a Comment