விஜய் நடிப்பில் ‘வேலாயுதம்’ படத்தை இயக்கியுள்ள ஜெயம் ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது: என்னை ரீமேக் இயக்குனர் என்கிறார்கள். அதைப்பற்றி வருத்தப்பட்டது இல்லை. நான் இயக்கிய படங்கள் எல்லாமே ரீமேக்தான்.
இவை எனக்கு திருப்தி அளித்த படங்கள். தொடர்ந்து ரீமேக் படங்கள் இயக்குவேன். நான் எழுதிய கதைகளையும் படமாக்குவேன். ‘வேலாயுதம்’ படத்தை ஜனரஞ்சகமான முறையில் இயக்கியுள்ளேன்.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் பட்ஜெட் பற்றி கவலைப்படாமல், கதைக்கு என்ன தேவையோ அதைச் செய்ய வேண்டும் என்று சுதந்திரம் கொடுத்தார். எதிர்பார்த்ததை விட சிறப்பாகவும், கமர்சியலாகவும் படம் உருவாகியுள்ளது. ஜெனிலியா பத்திரிகையாளராகவும், கிராமத்துப் பெண்ணாக ஹன்சிகாவும் நடிக்கின்றனர். 'ஆசாத்' படத்தின் மூலக்கதையை மட்டுமே எடுத்துக்கொண்டு, எனது பாணியில் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளேன்.
'வேலாயுதம்' ரிலீசுக்கு பிறகு கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் படத்தை இயக்குகிறேன். அடுத்து அஜீத்தை இயக்க உள்ளதாக சொல்கிறார்கள். அதுபற்றி தெரியவில்லை. அப்படியொரு வாய்ப்பு வந்தால் சந்தோஷம்தான்.
0 comments:
Post a Comment