தற்போது வெளியாகியுள்ள நண்பன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்டத்தி்ல் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக நடிக்கும் ஸ்ரீகாந்த், அவரது பட அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இதனைப்பற்றி அவர் கூறியதாவது நடிகர் விஜய் அடிப்படையில் மிகவும் அமைதியான நபர். ஆனால் அவர் கமெரா எதிர்கொள்ளும் போது முற்றிலும் வேறு கதாபாத்திரமாக மாறி விடுவார்.
இப்படத்திற்கு நடிகர் விஜய் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். மேலும் ஒரு பெரிய நடிகருடன் பணிபுரிந்த அனுபவத்தை என்றுமே மறக்கமாட்டேன்.
நடிகர் ஜீவா படப்பிடிப்பின் போது எப்போது கலகலப்பாக இருப்பார், ஆனால் அவரது காட்சிகள் வரும் போது மிகவும் சீரியசாக மாறிவிடுவார்.
இயக்குநர் சங்கர் தயாரிப்பில் பணியாற்றியது என் வாழ்நாளில் மறக்கமுடியாது ஒரு மிகப்பெரிய அனுபவமாக உள்ளது என்று கூறினார்.
0 comments:
Post a Comment