இளையதளபதி விஜய்யின் துப்பாக்கி படத்துக்கு சென்னை சிவில் கோர்ட் ஜூலை 16ம்தேதி வரை இடைக்காலத்தடை விதிதுள்ளது.
லோகிதாஸின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் கள்ளத்துப்பாக்கி படத்தை 2009 ஆம் ஆண்டு முதல் தயாரித்து வருவதாகவும், அதன் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செஇது வருடாவருடம் அதை புதுப்பிது வருவதாகவும் சென்னை சிவில் நீதிமன்றத்தில் இயக்குனர் லோகிதாஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் முருகதாஸின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள துப்பாக்கி படம் பற்றிய செய்தியை பத்திரிகைகளில் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தலைப்பை புதுப்பித்து வருவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்ததோடு படத்தை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அந்த மனுவில் மேலும் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியில் படத்தை தயாரித்து வருகிறார்.
எனவே துப்பாக்கி என்ற பெயரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும், என்றும் லோகிதாஸின் மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிமன்றில் விசாரித்த நீதிபதி திருமகள், மனுதாரர் கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பில் படம் தயாரித்து விரைவில் வெளியிட உள்ளதாகவும், இந்த தலைப்பை 2009ம் ஆண்டு பதிவு செய்து, ஒவ்வொரு ஆண்டும் தலைப்பை புதுப்பித்து வருவதாகவும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.
இப்போது துப்பாக்கி என்ற பெயரில் எதிர் மனுதாரர் தயாரிக்கும் படம் வெளியானால், தனக்கு இழப்பு ஏற்படும் என்றும், மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதற்கான ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதால், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு துப்பக்கி எனும் தலைப்பில் படத்தை வெளியிட ஜூலை மாதம் 16ம் திகதி வரை இடைக்காலத்தடை விதித்து தீர்ப்பளித்தார்.
Producer Dhanu about Thuppakki title controversy
0 comments:
Post a Comment