Home » » துப்பாக்கி இடைக்காலத்தடை மீண்டும் நீடிப்பு

துப்பாக்கி இடைக்காலத்தடை மீண்டும் நீடிப்பு

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் முருகதாஸின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள துப்பாக்கி படத்துக்கு எதிரான வழக்கின் மீதான விசாரணை வரும் 22ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
லோகிதாஸின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் கள்ளத்துப்பாக்கி படத்தை 2009 ஆம் ஆண்டு முதல் தயாரித்து வருவதாகவும், அதன் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்து வருடாவருடம் அதை புதுப்பிது வருவதாகவும் சென்னை சிவில் நீதிமன்றத்தில் இயக்குனர் லோகிதாஸ் மனுத்தாக்கல் செய்தார்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் முருகதாஸின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள துப்பாக்கி படம் பற்றிய செய்தியை பத்திரிகைகளில் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தலைப்பை புதுப்பித்து வருவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்ததோடு படத்தை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அந்த மனுவில் மேலும் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியில் படத்தை தயாரித்து வருகிறார். 

எனவே துப்பாக்கி என்ற பெயரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும், என்றும் லோகிதாஸின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிமன்றில் விசாரித்த நீதிபதி திருமகள், மனுதாரர் கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பில் படம் தயாரித்து விரைவில் வெளியிட உள்ளதாகவும், இந்த தலைப்பை 2009ம் ஆண்டு பதிவு செய்து, ஒவ்வொரு ஆண்டும் தலைப்பை புதுப்பித்து வருவதாகவும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். 

இதற்கான வழக்கு கடந்த ஜூலை மாதம் 16ம் திகதி வரை இடைக்காலத்தடை விதித்து தீர்ப்பளித்தார். இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக இருக்கும் துப்பாக்கி தலைப்பு தொடர்பான வழக்கினை விசாரணை செய்த நீதிபதி திருமகள், மீண்டும் கள்ளத்துப்பாக்கி வழக்கினை எடுத்துக்கொண்ட நீதிமன்றம் தலைப்பு மீதான தடையை நீடித்து, எதிர்வரும் 22ம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan