இளைய தளபதி விஜய், என் அருமைத் தம்பி என்று நடிகர் பவர் ஸ்டார் ஒன்பதுல குரு இசை வெளியீட்டில் பேசியிருக்கிறார்.
இளைய தளபதி விஜய்யிடம் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றும் பி.டி செல்வகுமார் கதை எழுதி இயக்கும் படம் ஒன்பதுல குரு.
வினய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
இதில் கே.எஸ்.ரவிக்குமார், சீனு ராமசாமி என திரையுலகின் முக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இவ்விழாவில் அனைவரின் கவனத்தையும் தன் பால் இழுத்தவர் நம் "பவர்ஸ்டார்"
.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெற்றிப்படமாக மாறியதிலிருந்து பவரின் ஆட்டம் மேடைகளில் கலைகட்டுகிறது.
இந்நிலையில் படம் குறித்து பேசிய பவர், இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறேன்.
செல்வகுமார் என்னை வந்து அணுகியபோது இளைய தளபதி விஜயின் மக்கள் தொடர்பாளர் என்றதும் உடனே ஒப்புக்கொண்டு நடித்துக்கொடுத்தேன்.
இப்படத்தின் மூலம் எனக்கு இளைய தளபதி என்ற ஒரு அருமை தம்பி கிடைத்து விட்டார் என்றார்.
0 comments:
Post a Comment