இலங்கை தமிழர்களுக்காக நாகபட்டினத்தில் விஜய் நடத்திய போரட்டம், வேலாயுதம் இசை வெளியீட்டு விழா நடந்த போது கூடிய கூட்டத்தை பார்த்து அரசியல் கட்சிகளே மூக்கு மேல் விரல் வைத்தன. இதை பார்த்து மற்றவர்கள் பொறாமை பட்டதும் நடந்தது.
இதே போல அண்மையில் விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் விஜய். 900 பேர் மட்டுமே இருக்க முடிகிற மண்டபத்தில் 6000கும் அதிகமான ரசிகர்கள் கூடி விட்டனர். பின்னர் அதிக கூட்டத்தாலும் விஜயை பார்க்கும் ஆர்வத்தாலும் ரசிகர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டு பிளாஸ்டிக் நாற்காலிகள் உடைந்...தன. இதனால் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிட கூடாதென்பதாலும் முன் வழியாக செல்ல முடியாது என்பதாலும் விஜய் தன்னுடைய வாகனத்தை மண்டபத்தின் பின்புறம் வர செய்து அதில் ஏறி போய் விட்டார்.
இதை அரசியல் ஆதாயமாக ஆக்க நினைத்த ஒன்றுக்கும் உதவாத சில நாளிதழ்கள் மற்றும் விஜய் வளர்ச்சியின்மேல் பொறமை கொண்ட சில விஷமிகள் இதற்கு அரசியல் சாயம் பூசி எதோ விஜய் தப்பு செய்து விட்டு தப்பித்து ஓடுவது போல் ஒரு கற்பனையை உண்டாக்கி விஜயின் பெயரை கெடுக்க பார்கின்றன.
ஒருவர் நல்லது செய்தால் அதை ஆதரியுங்கள். இல்லையென்றால் அமைதியாக இருங்கள். உங்களுடைய தலைவர்களை போல் யாருக்கும் உபயோகம் இல்லாமல் வாழ்வதை விட விஜய் செய்வது எவ்வளவோ மேல்.
0 comments:
Post a Comment