நவம்பர் முதல் வாரத்தில் ஷ§ட்டிங் போகலாம் என்று தீர்மானித்திருக்கிறார்களாம் த்ரி இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான தமிழ் படத்திற்கு.
இதில் விஜய், தமன்னா, ஜோடியாக நடிக்கிறார்கள் என்பதும், ஷங்கர் இயக்குகிறார் என்பதும் பரவலாக அறியப்பட்ட செய்திதான். அறியப்படாத ஒரு விஷயம்தான் இப்போது நாம் சொல்லப் போவது.
இப்படத்திற்கு 'ராஸ்கல்' என்று பெயர் வைத்திருக்கிறாராம் ஷங்கர். (இது தமிழ் பெயர் இல்லையே என்று மற்றவர்கள் விமர்சிக்கும் போது மாற்றிக் கொள்வாரோ என்னவோ) இதற்கிடையில் விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுகிற அளவுக்கு தனது பட ரிலீஸ்களை பிளான் பண்ணியிருக்கிறார் அவர். வருகிற தீபாவளிக்கு காவலன் திரைக்கு வருகிறான். வேலாயுதம் பொங்கலுக்கு.
ரசிகர்களின் சம்மர் விருந்துதான் இந்த ராஸ்கல். இதற்கிடையில் சீமானின் பகலவன் படத்திலும் நடிக்க முழு வேகத்துடன் இருக்கிறார் விஜய். இப்படத்தின் திரைக்கதை வசனத்தை சிறைக்குள்ளேயே எழுதி முடித்துவிட்டார் சீமான் என்பதை கடந்த வாரமே நாம் எழுதியிருந்தோம்.இதை சில தினங்களுக்கு முன்பு நடந்த தியாகி முத்துகுமார் பற்றிய ஆவணப்பட விழாவில் உறுதி படுத்தியிருந்தார் பாடலாசிரியர் அறிவுமதி.
விஜய்யின் இந்த மின் வேகப் பாய்ச்சலுக்கு ஒரு காரணம் இருக்கிறது. தமிழ்சினிமாவில் ரஜினி கமல் தவிர்த்து தான் மட்டுமே டாப்பில் இருக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் எண்ணம். கடந்த சில படங்களின் தோல்வி அவரது ரேங்க்கை சற்று கீழே இழுத்திருக்கிறது. அதை சமன்படுத்த வேண்டும் என்பதற்காகதான் இந்த பாய்ச்சல்!
0 comments:
Post a Comment