தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை சீமான் இயக்குவதாக இருந்தது. இதற்கான கதை விவாதமும் நடந்து வந்தது.
இந் நிலையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து சென்னையில் சீமான் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு, சீமான் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் அந்தப் படம் தொடர்பாகவே சீமானை தாணு சந்தித்ததாகத் தெரிகிறது.
0 comments:
Post a Comment