வெளிநாட்டு உரிமை வழங்கியதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கில் நடிகர் விஜய் படத்துக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான சரவணா ( Tantra Films ) சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கில் சரவணா தாக்கல் செய்துள்ளதாவது :
விஜய், அசின் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “காவலன்” படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாட்டு விநியோக உரிமையை ரூ.6 கோடிக்கு நான் வாங்கினேன். தற்போது இந்த உரிமையை எனக்கு கொடுக்காமல் வேறொருவருக்கு கொடுக்க முயற்சிகள் நடக்கின்றன.
ஒப்பந்தப்படி வெளிநாட்டு விநியோக உரிமையை எனக்கு அளிக்க வேண்டும். அதுவரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் சரவணா கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ராஜேஸ்வரன் விசாரித்து “காவலன்” படத்தை வெளியிட 6 வாரத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment