Home » » அஜித் முடிவுக்கு விஜய் காரணம்!

அஜித் முடிவுக்கு விஜய் காரணம்!

மங்காத்தாவில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற புதிய தகவல் சூடு கிளப்பியிருக்கும் இந்த நேரத்தில், தனது ரசிகர் மன்றத்தை கலைத்து
அதிரடி செய்த உண்மையான பின்னனி என்ன என்பது குறித்து பவ்வேறு செய்திகள் வெளியானபடி இருந்ததன.


ஆனால் இந்த செய்திகள் எல்லாமே இரண்டாம் நிலைக் காரணங்கள்தான். உண்மையான காரணம் விஜய் மக்கள் இயக்கம் சம்பந்தப்பட்டது என்கிறார்கள்.

அஜித் மன்ற கலைப்பு விஷயத்தில் அதிரடியாக முடிவு எடுத்ததற்குக் காரணமே, விஜய் ரசிகர் மன்றம் உடைக்கப்பட்ட அரசியல் கேமால்தான்
என்கிறார்கள் அஜித்தின் நிர்வாகத் தரப்பில். எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டால்... விஜய் மக்கள் இயக்க தலைவர் ஜெயசீலன் திடீரென்று திமுக வில்
இணைந்ததை யாருமே எதிர்பார்க்கவே இல்லை. முக்கியமாக விஜயும் அவரது அப்பாவும் இப்படி நடக்கும் என்று எதிரபார்க்கவே இல்லையாம்.

இப்படி வெளியேறிய ஜெயசீலன், விஜய் குடும்பத்தின் மீது சொன்ன புகார்கள் அவர்களை மனம் உடைய வைக்கும் அளவுக்கு இருந்தது. இதைக் கேள்விப்பட்ட பிறகுதான் அஜித் யோசிக்க ஆரம்பித்தார் என்கிறார்கள்.

தனது ரசிகர் மன்றத்தையும் வளர விட்டால் நாளைக்கு இதே அரசியல் விளையாட்டுக்கு பலியாக வேண்டி வரும் என்று நினைத்த அஜீத், இந்த சம்பவத்திற்கு பிறகுதான் வேண்டாம் என்று முடிவெடுத்தாராம்.

அஜித் என்ன நினைத்தாரோ அது இப்போது நடந்துவிட்டது என்கிறார்கள். அஜீத் ரசிகர் மன்றத்தின் பல மாவட்ட தலைவர்கள் முன்னனி அரசியல்
கட்சிகளில் சேர அந்தந்த மாவட்டத் தலைவர்களிடம் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்களாம். இந்த செய்தி அஜித் காதுக்கு வந்த கையோடு தனது நிர்வாகியிடம் சொன்ன வார்த்தைகள் இதுதான் “ ரசிகர் மன்றங்கள் அரசியலுக்கு பலியாகிடுச்சு. இதை யாரும் இனிமே நிறுத்த முடியாது. நம்ம வேலைய ஒழுங்கா பாப்போம். படம் நல்லா இருந்தா தியேட்டருக்கு வந்து பாக்கட்டும்”
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan