நடிகர் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மொடல் அழகி ஏஞ்சலா ஜான்சன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
"வேலாயுதம்", "நண்பன்" படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குபவர் சீமானா, ஏ.ஆர்.முருகதாசா? என்ற பட்டிமன்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.
டைரக்டர் முருகதாஸ் இயக்கத்தில் தான் விஜய் நடிக்கப்போகிறார். படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை பற்றிய செய்திகளும் தினம் தினம் புதிது புதிதாக வந்து கொண்டேத்தான் இருக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி விஜய் ஜோடியாக பிரபல மொடல் அழகி ஏஞ்சலா ஜான்சன் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கிங்ஃபிஷர் காலண்டரை அலங்கரிக்கும் மாடல் அழகிதான் இந்த ஏஞ்சலா ஜான்சன்.
20 வயதே ஆன ஏஞ்சலா சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை மங்களூர் தொழிலதிபர். தாயார் ஐஸ்லாந்துக்காரர். ஏற்கனவே பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருக்கும் ஏஞ்சலா, தமிழிலும் கமிட் ஆகவிருப்பதாக கூறப்படுகிறது.
மொடல் அழகி ஏஞ்சலா பாலிவுட் படத்தில் கமிட் ஆன சில நாட்களிலேயே நடிகர் ரன்பீர் கபூருடன் நெருங்கி பழகுவதாக கிசுகிசுவில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment