நண்பன் திரைப்படத்திற்கு பாடல் எழுதிய கவிஞர் ஐம்பது பாடல்களை எழுதியுள்ளார். கவிஞர் கார்க்கி கவிஞர் வைரமுத்துவின் மகன் ஆவார். இவர் தமிழ் படங்களில் ஐம்பது பாடல்களுக்கு மேலாக பாடல் எழுதியுள்ளார். கோ, எந்திரன், எங்கேயும் காதல், போன்ற வெற்றிப்படங்களுக்கு பாடல் எழுதி தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.
தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துக்கொண்டிருக்கும் நண்பன் திரைப்படத்தில் இவரது பாடல்களான முகமூடி,தடையறத் தாக்க,வல்லினம்,பொன் மாலை பொழுது என இளம் கவிஞர் கார்க்கி பாட்டெழுதும் படங்களின் எண்ணிக்கை நீள்கிறது.
அடுத்ததாக சித்தார்த், அமலா பால் இருவரும் இணைந்து நடித்துள்ள காதலில் சொதப்புவது எப்படி? என்ற காதல் படத்துக்கு தமன் இசையில் பாட்டு எழுதியுள்ளார்.
மதன் கார்க்கி கூறியதாவது, என்னை மாதிரி கவிஞருக்கு கொலிவுட் படைப்பாளிகள் சுதந்திரம் அளிப்பதால் உற்சாகமாக கற்பனையில் சிறகடித்து பறக்க முடிகிறது என்று கூறியுள்ளார்.
கோலிவுட் படங்களுக்கு பாடல்களை எழுதி அரை சதமடித்த, கார்க்கி விரைவில் சதமடிக்க இயக்குனர்கள் வாழ்த்தியுள்ளார்கள்.
0 comments:
Post a Comment