
ஏனெனில் அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் வெற்றிப் பாடல்கள் திரைப்படங்களில் மிகவும் குறைவு.
இப்பாடலை எப்படியாவது வெற்றிபெறச் செய்தே ஆகவேண்டும் என்று நினைத்து ரொம்பவும் யோசித்து ரத்தத்தின் ரத்தமே என்ற எம்.ஜி.ஆர் வார்த்தையை முதல் வரியாக எழுதினேன்.
அந்த வார்த்தை ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்த வார்த்தை என்பதால், மக்களிடம் அது எளிதாக சென்று சேரும் என்று எதிர்பார்த்தேன்.
அதே நேரத்தில் ஒரு தங்கையை நோக்கி அண்ணன் சொல்வதற்கும் அதைவிட பொருத்தமான வேறு வார்த்தை இல்லை. அடுத்த வரியாக என் இனிய உடன்பிறப்பே என்று கலைஞர் சொல்லும் வார்த்தைகளைப் பயன்படுத்தினேன்.
மேலும் விஜய் சாருக்கு இந்த இரண்டு பெரிய கட்சிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் இப்பாடலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
இப்பாடலில் வரும் செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா என்கிற வரிகளை விஜய் ஆண்டனி சார் நான் எழுதிய நொடியிலேயே வெகுவாக ரசித்துப்பாராட்டினார்.
விஜய் சாருக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல் என்று அவர் மூலம் நான் அறிந்தபோது பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.
0 comments:
Post a Comment