இன்று எங்களின் இளையதளபதி விஜய் அண்ணா தனது 38வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
இதன் முதற்கட்டமாக இன்று காலை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று இன்றைய தினம் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கிறார்.
இந்த மருத்துவமனையில் தான் 1974ம் ஆண்டு இதே நாளில் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்கள் பல சமூக நலத்திட்டங்களை இன்றைய தினத்தில் விஜய்யின் பிறந்தநாள் சார்பாக செய்கின்றனர். நீலாங்கரையில் விஜய்யின் அப்ப சந்திரசேகரன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாமை தொடங்கி வைக்கிறார்.
வேளச்சேரி பகுதி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் திருவான்மியூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. சின்மயாநகர் குழந்தை இயேசு ஆலயத்தில் முதியோருக்கு அன்னதானம், மற்றும் வேட்டி சேலை வழங்கும் திட்டம் என்பன நடைபெறும். கொருக்குப்பேட்டை மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
புரசைவாக்கம், கோடம்பாக்கம் பகுதி ரசிகர்களும் அந்தந்த பகுதி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் எஸ்.ஏ. சந்திரசேகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் ஆனந்த், செயலாளர் ரவிராஜா, துணை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் எல்.குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியில் உள்ள அனைத்து ரசிகர்களின் சார்பில் இளையதளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
1 comments:
Happy birthday thalaiva !!!
Post a Comment