
தலைவா படக்குழு, மும்பையில் தனது படப்பிடிப்பை விரைவில் முடிக்க இருக்கிறது. |
இளைய தளபதி, அமலா பால் நடிக்கும் தலைவா படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் படத்தின் முக்கிய காட்சிகளை மும்பையில் அதிவிரைவாக எடுத்து முடித்து விட்டாராம். மீதியுள்ள காட்சிகளையும் எடுத்து விட்டு தலைவா படக்குழு அவுஸ்திரேலியா பறக்க இருக்கிறது. படத்தில் சத்யராஜ், ராஜிவ் பிள்ளை, சந்தானம், பொன் வண்ணன், அபிமன்யு சிங் மற்றும் இரண்டாவது நாயகியாக ராகினி என்ற வட நாட்டு பெண் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். |
0 comments:
Post a Comment