SUPERHIT MOVIE OF THE YEAR.. CROSSED 100Cr in 12 days
ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''கத்தி''! விஜய்யின் முந்தைய படங்களான ''காவலன்'', ''துப்பாக்கி'', ''தலைவா'' படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் வெளிவருமா, வெளிவராதா என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஒருவழியாக வெளிவந்திருக்கிறது கத்தி!!
Dear friends and followers of Vijay 360,,, im really really sorryabout the gapwithout any updates. Please Join us with INSTAGRAM.COM/@VIJAY_OFFICIAL for Daily updates.
திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வரின் பேரன்கள் ஆளுக்கொரு சினிமா கம்பெனி ஆரம்பித்து மொத்த தமிழ் சினிமாவையும் தியேட்டர்களையும் தங்கள் கண்ட்ரோலில் வைத்துக்கொண்டு இருந்தார்கள், அது போதாதென்று பாசத்தலைவனுக்கொரு பாராட்டுவிழா என்ற பெயரில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி பாராட்டு விழா எடுக்கிறோம் என்று பாராட்டுவிழா எடுத்து அதில் ரஜினி,கமல் உட்பட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று "அன்பு" அழைப்பு வேறு.
இதை ஒரு முறை நடந்த பாராட்டுவிழாவில் கருணாநிதியிடம் "அய்யா மெரட்டுறாங்க அய்யா" என்று நடு மேடையில் அஜீத் போட்டு உடைக்க அதற்கு ரஜினி எழுந்து நின்று கைதட்ட மூட் அவுட் ஆன கருணாநிதி மேடையிலேயே விளாசிவிட்டு சென்று விட்டார், அதன் பின் அஜீத் கோபாலபுரம் வாசலில் காத்து கிடந்து நேரில் சென்று மன்னிப்பு கேட்டு பின் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் மனைவியுடன் போய் கடைசி சேரில் உட்கார்ந்து கிடந்தது பழைய கதை.
ஆட்சிகள் மாறின, ஆனால் காட்சிகள் மாறவில்லை, விஜயகாந்தை எதிர்க்கிறேன் என அதிமுக கூட்டணியை எதிர்த்து வடிவேலு தேர்தல் நேரத்தில் ஓவராக சலம்ப முடிவுகள் வேறு விதமாக வந்தது, அன்றிலிருந்து இன்றுவரை படம் இல்லாமல் இருக்கிறார், இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று சொன்னாலும் வேறு பல காரணங்களால் விஸ்வரூபம் முடக்கப்பட்டது, விஜய்யின் தலைவாவும் வெளிப்படையாக சொல்லாமல் ஏதேதோ காரணங்கள் சொல்லி தடுக்கப்பட்டு பின் வெளியானது.
விஜய் கைகட்டி மன்னிப்பு கேட்கும் விதமாக வீடியோ வெளியிட்டார், இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டு விழா கூட்டத்தில் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டுள்ள விஜய்யின் படக்குறிப்புகள் கிளிப்பிங்குகள் எதுவும் வெளியிடப்படவில்லை, ஆனால் வேறு பல படங்களின் கிளிப்பிங்குகள் வெளியாகின, அதே போன்று விஜய்க்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை, விஜய் அமைதியாக கடைசி வரிசையில் சென்று உட்கார்ந்தார், ஆனால் விஜய்யை வளைத்து வளைத்து படம் எடுத்ததில் இன்று காலை வெளியான பல பத்திரிக்கைகளிலும் விஐபி வரிசையில் கடைசி வரிசையில் உட்கார்ந்த விஜய் படம் பெருமளவி வெளியானது.
தமிழ்நாடு சினிமாவிலிருந்தே தனது பல முதல்வர்களை தேர்ந்தெடுத்திருப்பதால் ஆளும் வர்கத்துக்கு சினிமாவை கடுப்படுத்த வேண்டும் என்ற ஆவல் உள்ளது தெரிகிறது, அது எந்த கட்சி ஆண்டாலும் என்ற நிலையில் உள்ளது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல.
ரம்ஜானை முன்னிட்டு நடிகர் விஜய், அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தலைவா.
தலைவா படமானது வருகின்ற 9ம் திகதி தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தலைவா படத்தை திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இது குறித்து விஜய் கூறுகையில், தலைவா படம் குடும்பத் தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய படம்.
இந்த படத்தில் காதல் ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன.
இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல. யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள்.
இப்படம் துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்றார் விஜய்.