3 இடியட்ஸ் கிட்ட தட்ட உறுதியாகிவிட்டது. ஷங்கர் டிசம்பர் 5ல் ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறார். இதற்காக ஷங்கர் டெல்லி சென்றிருக்கிறார் என்கிறது செய்தி.
இதில் முதல் இரண்டு ரோல்களுக்கு விஜய், ஜீவா தயாராகி விட 3 வது ரோலை செய்ய தமிழ் ஆள் தேடுவது பெரும்பாடாகி விட்டது ஷங்கருக்கு. ஸ்ரீகாந்த் தானாவே வந்து இந்த வேடத்தில் நடிக்கிறேன் என்று சொல்ல அவரும் ஆட்டத்தில் சேர்ந்து கொண்டார், இப்போது இவருக்கு போட்டியாக உன்னாலே உன்னாலே வினயும் ஆட்டத்தில் சேருகிறார். ஷங்கர் இன்னும் இவர்களில் யாரென்று முடிவு செய்யவில்லை என்று தெரிகிறது. விரைவில் எல்லா செய்திகளும் ஒன்றாக வரும்.
3 இடியட்ஸ்’ படத்தில் நடிக்க இலியானாவுக்கு ரூ.1.50 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியில் ஹிட்டான, ‘3 இடியட்ஸ்’ படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் ஹீரோக்களாக விஜய், ஜீவா நடிக்கின்றனர். இன்னொரு ஹீரோ முடிவாகவில்லை.
கொடூர கொலையாளி மோகனகிருஷ்ணன் கொல்லப்பட்டதை வரவேற்கிறேன். இது அவனுக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
இளம் சிறுமியைக் கற்பழித்தும், அவளது தம்பியை கொடூரமாக கிணற்றில் வீசியும் கொன்ற மோகனகிருஷ்ணனை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என ஆவேசப்பட்டிருந்தார் விஜய்.
தீபாவளிக்கு இனிப்புகளை கொடுத்து மகிழும் நடிகர்களின் மத்தியில் விஜய் கொஞ்சம் வித்தியாசமாகவும், முக்கியமானதாகவும் ஒன்றை செய்திருக்கிறார். இந்த வருட தீபாவளி பண்டிகைக்காக ஏழை விவசாயிகளுக்கும், ஆதரவற்ற பெண்கள் என 108 பேருக்கு கன்றுடன் கூடிய கறவைப் பசுக்களை தானமாக கொடுத்திருக்கிறார்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக மாறிவரும் சினிமா பிரபலங்கள் பட்டியல் நீண்டுகொண்டு வருகிறது. தற்போது கௌதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் தயாரிப்பாளர்களாக மாறியுள்ளனர். ஆர்யாகூட தனது தயாரிப்பில் ‘படித்துரை’ என்னும் படத்தை தயாரித்து முடித்துள்ளார்.
இந்த வரிசையில் ஹைலைட்டாக ஒரு முக்கியமான ‘தல’ தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளது.
ரஜினியின் அண்ணாமலை படத்தில் வரும் ‘வந்தேன்டா பால்காரன்…’ பாடலைப் பாடி., ஏழை விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு 108 பசுக்களை தானமாகக் கொடுத்தார் நடிகர் விஜய்.