இந்த தீபாவளிக்கு இரண்டே படங்களில் வெற்றி பெறப் போவது 7 ஆம் அறிவா, வேலாயுதமா என்று ஏக எதிர்பார்ப்பு நிறைய இருந்தன. ஆனால் ஓபனிங்கை பொறுத்தவரை இரண்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.
மங்காத்தா படத்தில் தியேட்டர் காட்ட்சி ஒன்றில் விஜயின் `விண்ணைக்காப்பான் ஒருவன் பாடல் காட்சி இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்த நட்பை நன்றி பாராட்டும் விதமாக வேலாயுதத்தில் இடம்பெற்ற ஒரு தேநீர்க்கடை காட்சி ஒன்றில் வானொலியில் மங்காத்தா பாடல் இடம்பெற்றமை விஜய் அஜித் நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
நேற்று இரவுக்காட்சி (25/10/2011) லண்டன் சினி வேல்ட் திரையரங்குகளில் ரசிகர்கள் அதிருப்தி. காரணம் படம் வெறும் இரண்டே மணித்தியாலங்களில் முடிந்துவிட்டது. பெரும் பண மற்றும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட வேலாயுதம் சண்டைக்காட்சிகளில் ஒரு நிமிடக் காட்சிகளைக்கூட திரையில் காண முடியவில்லை.
வேலாயுதம் படத்தில் விஜய்க்காக எழுதிய பாடல் இன்றைய இளம் தலைமுறையினர் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் பிடித்தமான பாடலாக மாறியுள்ளது. இப்பாடலை எழுதிய அண்ணாமலை, நான் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ரத்தத்தின் ரத்தமே பாடல்தான் எனக்கு சவாலாக அமைந்துள்ளது.
நண்பன் திரைப்படத்திற்கு பாடல் எழுதிய கவிஞர் ஐம்பது பாடல்களை எழுதியுள்ளார். கவிஞர் கார்க்கி கவிஞர் வைரமுத்துவின் மகன் ஆவார். இவர் தமிழ் படங்களில் ஐம்பது பாடல்களுக்கு மேலாக பாடல் எழுதியுள்ளார். கோ, எந்திரன், எங்கேயும் காதல், போன்ற வெற்றிப்படங்களுக்கு பாடல் எழுதி தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.