ஏகப்பட்ட திருப்பங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது காவலன் படம். நேற்றைய நிலவரம் ஒன்று. இன்றைய நிலவரம் வேறொன்றாக திடுக்கிடும் திருப்பங்கள் இப்படத்தின் வெளியீட்டு விஷயத்தில்.
நடிகர் விஜய் நடித்த படம் ‘காவலன்’. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்தடுத்த வழக்குகள் மற்றும் பரபரப்பான தீர்ப்புகளால் அந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காவலன் படத்துக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
விஜய் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி. நேற்று மாலை சுமார் ஏழு மணியளவில் கூடிய முக்கியஸ்தர்களின் பேச்சு வார்த்தையை அடுத்து காவலன் பிரச்சனையில் பெருமளவு முன்னேற்றமாம். “இது வெறும் படமல்ல… என் பிரஸ்டீஜ்” என்று கூறிவிட்டாராம் விஜய். “எப்பாடு பட்டாவது பொங்கலுக்கு வெளியிட்டு விட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாரராம் அவர். விளைவு? அவரது சொந்தப்பணத்திலிருந்து சில ‘சி’ க்கள் காலி!
ரஜினி ரசிகனாகவே தன்னை எப்போதும் சொல்லிக் கொள்வார் சிம்பு. அதன் பிறகு சிம்பு நிகழ்ச்சிகளில் பேசுகையில் ரஜினிக்கு பிறகு எனக்கு விஜய் தான் பிடிக்கும். விஜய் படங்கள் பார்த்து தான் டான்ஸ் மேல எனக்கு இன்னும் ஆர்வம் வந்தது என்று சொல்லுவார். தன் படங்களை விஜய்யிக்கு போட்டு காண்பிப்பார்.
மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படத்தில் சிறப்பாக நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கியது ஏசியாநெட் நிறுவனம். மலையாளத்தில் பிரபல சேனலான ஏசியாநெட், ஆண்டுதோறும் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது வழங்கும் விழா கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அமிதாப் பச்சன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
பொங்கலுக்கு எத்தனை படங்கள் வருகின்றன என்பதில் இப்போதும் கூட குழப்ப நிலைதான் நீடிக்கிறது. ஆனால் விஜய்யின் “காவலன்”, தனுஷ் நடித்த “ஆடுகளம்”, கலைஞரின் “இளைஞன்”, “சிறுத்தை” போன்ற படங்கள் ரிலீஸ் உறுதி என்பதால் இப்போதே முன்பதிவு தொடங்கிவிட்டது.
சமீபத்தில் பின்னி மில்லில் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பும், மங்காத்தா பட ஷ§ட்டிங் நடந்தது. வேலாயுதம் யூனிட்டுக்கும் சேர்த்து எனது செலவில் பிரியாணி வழங்கப்படும் என்று கூறிவிட்டாராம் அஜீத்.