
விஜய் தங்கையாகநிவேதா தாமஸ்
Wednesday, May 15, 2013

"தலைவா படத்துக்கு பின், "ஜில்லா என்ற படத்தில் நடிக்கிறார், விஜய். இதில், விஜய் தந்தையாக, பிரபல மலையாள நடிகர், மோகன் லால் நடிக்கிறார். இந்த படத்தில், விஜய்க்கு, தங்கை கேரக்டர் உண்டாம். இந்த தங்கை கேரக்டருக்கு, படத்தில் முக்கியமான ரோலாம். இதனால், இதில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை, நீண்ட நாட்களாக தேடி வந்தனர்.
நீண்ட தேடலுக்கு பின், தற்போது, மலையாளத்தில் பிரபலமான, நிவேதா தாமசை, விஜய் தங்கை கேரக்டரில் நடிக்க, ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர், சசி குமார் நடித்த, "போராளி படத்தில் நடித்தவர். இதில் நடிப்பது குறித்து, நிவேதா கூறுகையில், "இந்த படத்தில் என், நடிப்பு திறமையை வெளிப்படுத்த கூடிய அளவுக்கு, நல்ல கேரக்டர் கிடைத்துள்ளது. அண்ணனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும், பாசமான தங்கை கேரக்டரில் நடிக்கிறேன். இதற்கு பின், எனக்கு தமிழில், நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என, நம்புகிறேன்என்கிறார்,நிவேதா.

விஜய் கொடுத்த பாராட்டு! வியந்து போன தனுஷ்!

விஜய் டிவியின் ”விஜய் விருதுகள் 2013” வழங்கும் விழா நேற்று முந்தினம்(13.05.13) நடந்தது. பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்
கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், தனுஷ் என திரையுலகத்தைச் சார்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். விருது வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஷாருக்கானுக்கு செவாலியர் சிவாஜிகணேசன் விருது கமல் கையால், சிவாஜி அவர்களின் குடும்பத்தாரின் (பிரபு, விக்ரம் பிரபு)
முன்னிலையிலும், நடிகர் விஜய் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.
விருதை பெற்றுக்கொண்ட ஷாருக் கான் “தமிழ்த்திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி நடிகர்களான கமல்ஹாசனுடனும் (ஹே ராம்), ஜித்குமாருடனும்(அஷோகா) நான் நடித்தபோது பெருமகிழ்ச்சி கொண்டேன்.
மேலும் நான் கொல்கத்தா அணியின் உரிமையாளராக இருந்தாலும்
சென்னை அணிதான் எனது ஃபேவரெட் அணி” என்று கூற் ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றுக்கொண்டார்.
பிறகு ஃபேவரெட் ஆக்டர், பெஸ்ட் எண்டர்டெயினர் ஆகிய இரு விருதுகளையும் பெற்றுக்கொண்ட விஜய் பேசிய போது “எனக்கு இரண்டு விருதுகள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் என்னை விட சிறந்த நடிகர் என் முன் உட்கார்ந்திருக்கிறார்” என்று தனுஷை சுட்டிக்காட்டினார். மற்றொரு நடிகரை தன்னை விட சிறந்தவர் என்று மேடையில் பேசிய விஜய்யின் குணத்தைப் பாராட்டி நடிகர் தனுஷ் டுவிட்டரில் “ விஜய் சாரின் உயர்ந்த வார்த்தைகளுக்கு என் தனிப்பட்ட வணக்கம். ஆனால் என்றைக்கும் அவர் தான் சிறந்த, பெரிய நடிகர். எனக்கு இந்தமுறை இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்று ‘விஜய்
விருதுகள்’, மற்றொன்று ‘விஜய்’ சாரின் விருது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

விஜய் படத்திற்கு இசையமைக்க காரணம் தனுஷ் - அனிருத்!

ஆனால் இந்த ஹிட் 3 திரைப்படத்தைப்போல அனிருத்தை ஏமாற்றவில்லையாம். இன்று(13.05.13) நடந்த எதிர்நீச்சல் சக்சஸ் மீட்டில் பேசிய அனிருத் “ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷனில் உருவாகவிருக்கும் திரைப்படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம், தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படக்குழு அப்படியே இணையும் மற்றொரு படம் என 3 படங்கள் தற்போது கைவசம் இருக்கின்றன.
கொலவெறி பாடல் எனக்கு பெயர் வாங்கிக்கொடுத்தாலும், எதிர்நீச்சல் திரைப்படத்தில் எனக்கு கிடைத்த வெற்றி தான் எனக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது. எதிர்நீச்சல் தான் எனக்கு முதல்படம். எனக்கு இந்த வய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தனுஷுக்கு மிக்க நன்றி” என்று கூறியுள்ளார். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படத்தைத்தான் அனிருத் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

இளைய தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய்: இயக்குனர் விஜய்
Tuesday, May 14, 2013
Subscribe to:
Posts (Atom)