Thursday, February 21, 2013
விஜய் நடிக்கவுள்ள புதிய படமொன்றின் மூலம் மீண்டும் கொலிவுட்டிற்கு வருகிறார் நடிகை அசின்.மீண்டும் விஜய்யுடன் அஸினை ஜோடி சேர வைக்கின்றார் கே.வி. ஆனந்த்.
‘மாற்றான்’ படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் அடுத்து ரஜினியை வைத்து ஒரு படத்தை டைரக்ட் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இப்போது அவர் விஜய்யை வைத்து ஒரு படம் டைரக்ட் செய்யப்போவதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தலைவா,ஜில்லா ஆகிய படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் இந்த புதிய படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
காவலன் படத்தின் வெற்றிக்குப் பிறகும் தமிழ்ப்பட வாய்ப்புகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருந்த அசின்
தற்போது இந்தப்படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி ஆகிறார்.
ஏற்கனவே ஏ.ஜி.எஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படத்தை டைரக்ட் செய்வதற்காக கே.வி. ஆனந்தினை ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால் கோச்சடையான் படத்திற்குப் பிறகு தான் சிறிது காலம் ஓய்வெடுக்கப்போவதாக ரஜினி சொல்லி விட்டதால்
இப்போது ரஜினிக்கு பதிலாக விஜய்யை செலக்ட் செய்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.