ஏகவீரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம், ‘காவலன்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. விஜய், அசின், வடிவேலு, ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம், தயாரிப்பாளர் சி.ரோமேஷ்பாபு, இயக்குனர் சித்திக் கலந்து கொண்டனர்.
‘போக்கிரி’, ‘சிவகாசி’ படத்துக்கு பிறகு விஜய், அசின் இணைந்து நடிக்கும் 'காவலன்' படத்தின் அறிமுக விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று சென்னை தி.நகர் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. டைரக்டர் சித்திக், தயாரிப்பாளர் ரொமேஷ்பாபு, விஜய், அசின், வடிவேலு ஆகியோர் பங்கேற்றனர்.
விஜய் நடிக்கும் 51-வது படத்திற்கு காவல்காரன், காவல் காதல் என்று பலவிதமான தலைப்புகள் யூகங்களாக வந்தன. தீவிர பரிசீலனைக்குப் பின் இப்போது காவலன் என்கிற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
நடிகர் விஜய்யின் 51வது படமாக உருவாகி வரும் காவலன் டிசம்பரில் ரீலிஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி விருந்தாக காவலன் படம் வெளிவரும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் ரீலிஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளது.