
ஆளுபவர்களிடமிருந்து விடுதலை ஆகுமா சினிமா?
Monday, September 23, 2013
திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வரின் பேரன்கள் ஆளுக்கொரு சினிமா கம்பெனி ஆரம்பித்து மொத்த தமிழ் சினிமாவையும் தியேட்டர்களையும் தங்கள் கண்ட்ரோலில் வைத்துக்கொண்டு இருந்தார்கள், அது போதாதென்று பாசத்தலைவனுக்கொரு பாராட்டுவிழா என்ற பெயரில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி பாராட்டு விழா எடுக்கிறோம் என்று பாராட்டுவிழா எடுத்து அதில் ரஜினி,கமல் உட்பட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று "அன்பு" அழைப்பு வேறு.
இதை ஒரு முறை நடந்த பாராட்டுவிழாவில் கருணாநிதியிடம் "அய்யா மெரட்டுறாங்க அய்யா" என்று நடு மேடையில் அஜீத் போட்டு உடைக்க அதற்கு ரஜினி எழுந்து நின்று கைதட்ட மூட் அவுட் ஆன கருணாநிதி மேடையிலேயே விளாசிவிட்டு சென்று விட்டார், அதன் பின் அஜீத் கோபாலபுரம் வாசலில் காத்து கிடந்து நேரில் சென்று மன்னிப்பு கேட்டு பின் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் மனைவியுடன் போய் கடைசி சேரில் உட்கார்ந்து கிடந்தது பழைய கதை.
ஆட்சிகள் மாறின, ஆனால் காட்சிகள் மாறவில்லை, விஜயகாந்தை எதிர்க்கிறேன் என அதிமுக கூட்டணியை எதிர்த்து வடிவேலு தேர்தல் நேரத்தில் ஓவராக சலம்ப முடிவுகள் வேறு விதமாக வந்தது, அன்றிலிருந்து இன்றுவரை படம் இல்லாமல் இருக்கிறார், இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று சொன்னாலும் வேறு பல காரணங்களால் விஸ்வரூபம் முடக்கப்பட்டது, விஜய்யின் தலைவாவும் வெளிப்படையாக சொல்லாமல் ஏதேதோ காரணங்கள் சொல்லி தடுக்கப்பட்டு பின் வெளியானது.
விஜய் கைகட்டி மன்னிப்பு கேட்கும் விதமாக வீடியோ வெளியிட்டார், இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டு விழா கூட்டத்தில் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டுள்ள விஜய்யின் படக்குறிப்புகள் கிளிப்பிங்குகள் எதுவும் வெளியிடப்படவில்லை, ஆனால் வேறு பல படங்களின் கிளிப்பிங்குகள் வெளியாகின, அதே போன்று விஜய்க்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை, விஜய் அமைதியாக கடைசி வரிசையில் சென்று உட்கார்ந்தார், ஆனால் விஜய்யை வளைத்து வளைத்து படம் எடுத்ததில் இன்று காலை வெளியான பல பத்திரிக்கைகளிலும் விஐபி வரிசையில் கடைசி வரிசையில் உட்கார்ந்த விஜய் படம் பெருமளவி வெளியானது.
தமிழ்நாடு சினிமாவிலிருந்தே தனது பல முதல்வர்களை தேர்ந்தெடுத்திருப்பதால் ஆளும் வர்கத்துக்கு சினிமாவை கடுப்படுத்த வேண்டும் என்ற ஆவல் உள்ளது தெரிகிறது, அது எந்த கட்சி ஆண்டாலும் என்ற நிலையில் உள்ளது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல.
இதை ஒரு முறை நடந்த பாராட்டுவிழாவில் கருணாநிதியிடம் "அய்யா மெரட்டுறாங்க அய்யா" என்று நடு மேடையில் அஜீத் போட்டு உடைக்க அதற்கு ரஜினி எழுந்து நின்று கைதட்ட மூட் அவுட் ஆன கருணாநிதி மேடையிலேயே விளாசிவிட்டு சென்று விட்டார், அதன் பின் அஜீத் கோபாலபுரம் வாசலில் காத்து கிடந்து நேரில் சென்று மன்னிப்பு கேட்டு பின் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் மனைவியுடன் போய் கடைசி சேரில் உட்கார்ந்து கிடந்தது பழைய கதை.
ஆட்சிகள் மாறின, ஆனால் காட்சிகள் மாறவில்லை, விஜயகாந்தை எதிர்க்கிறேன் என அதிமுக கூட்டணியை எதிர்த்து வடிவேலு தேர்தல் நேரத்தில் ஓவராக சலம்ப முடிவுகள் வேறு விதமாக வந்தது, அன்றிலிருந்து இன்றுவரை படம் இல்லாமல் இருக்கிறார், இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று சொன்னாலும் வேறு பல காரணங்களால் விஸ்வரூபம் முடக்கப்பட்டது, விஜய்யின் தலைவாவும் வெளிப்படையாக சொல்லாமல் ஏதேதோ காரணங்கள் சொல்லி தடுக்கப்பட்டு பின் வெளியானது.
விஜய் கைகட்டி மன்னிப்பு கேட்கும் விதமாக வீடியோ வெளியிட்டார், இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டு விழா கூட்டத்தில் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டுள்ள விஜய்யின் படக்குறிப்புகள் கிளிப்பிங்குகள் எதுவும் வெளியிடப்படவில்லை, ஆனால் வேறு பல படங்களின் கிளிப்பிங்குகள் வெளியாகின, அதே போன்று விஜய்க்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை, விஜய் அமைதியாக கடைசி வரிசையில் சென்று உட்கார்ந்தார், ஆனால் விஜய்யை வளைத்து வளைத்து படம் எடுத்ததில் இன்று காலை வெளியான பல பத்திரிக்கைகளிலும் விஐபி வரிசையில் கடைசி வரிசையில் உட்கார்ந்த விஜய் படம் பெருமளவி வெளியானது.
தமிழ்நாடு சினிமாவிலிருந்தே தனது பல முதல்வர்களை தேர்ந்தெடுத்திருப்பதால் ஆளும் வர்கத்துக்கு சினிமாவை கடுப்படுத்த வேண்டும் என்ற ஆவல் உள்ளது தெரிகிறது, அது எந்த கட்சி ஆண்டாலும் என்ற நிலையில் உள்ளது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல.

தலைவா அரசியல் படம் அல்ல
Thursday, August 8, 2013
ரம்ஜானை முன்னிட்டு நடிகர் விஜய், அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தலைவா.
தலைவா படமானது வருகின்ற 9ம் திகதி தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தலைவா படத்தை திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இது குறித்து விஜய் கூறுகையில், தலைவா படம் குடும்பத் தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய படம்.
இந்த படத்தில் காதல் ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன.
இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல. யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள்.
இப்படம் துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்றார் விஜய்.
தலைவாவுக்கு "U"
Saturday, August 3, 2013
இளையதளபதி விஜய்யின் தலைவா படத்திற்கு சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டி U சான்றிதழ் வழங்கியுள்ளது.
முன்னர் விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியது. U/A சான்றிதழ் பெற்ற படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு பெறுவது கஷ்டமாகிவிடும்.இதையடுத்து தலைவா படம் ரிவைசிங் கமிட்டிக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்த்த கமிட்டி சில இடங்களை கத்திரிக்குமாறு கூறிவிட்டு படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதையடுத்து படம் அறிவித்தபடி வரும் 9ம் திகதி வெளியாகவுள்ளது. தலைவா திருவிழா ஆரம்பம்.
அமைதியான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய இளையதளபதி
Saturday, June 22, 2013
விஜய்யிடன் நடனமாடும் ஜிவி பிரகாஷ்
Thursday, June 20, 2013
கொலிவுட்டில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
மிகவும் குறுகிய காலத்திற்குள் 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
இவர் பரதேசி படத்திற்கு பின்பு அன்னக்கொடியும் கொடிவீரனும், தலைவா ஆகிய படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் சேர்ந்துள்ளார்.
மேலும் ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்தன.
ஆனால் அதற்கு மறுத்துவிட்ட ஜி.வி., தற்போது மத யானைக்கூட்டம் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இதற்கிடையே சில படங்களில் பாடல் காட்சிகளில் முகம் காட்டி வந்த ஜி.வி.பிரகாஷ், தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலில் விஜய் மற்றும் சந்தானத்துடன் இணைந்து நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹாலிவூட்டில் விஜய்
Monday, June 17, 2013
பணக்காரன்,
உழைப்பாளி, சின்னதம்பி, மன்னன்,
சந்திரமுகி உள்ளிட்ட பல ஹிட்
படங்களை இயக்கியவர் பி.வாசு. தமிழ்,
தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்
60 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில்
தற்போது முதன்முதலாக ஹாலிவுட்டில்
ஒரு படம் இயக்க உள்ளார்.
படத்திற்கு "கரி இன் லவ்" என்று பெயர்
வைத்துள்ளனர்.
இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய
பி.வாசு கூறியதாவது, நான் புதிய
படத்துக்கான கதை விவாதத்தில்
இருந்தபோது, அமெரிக்க வாழ் தமிழர்
ராஜ்திருச்செல்வம் என்பவர் என்னிடம்
பேசினார்.
அப்போது தங்களது சந்திரமுகி படத்தை பார்த்தேன்,
அதேப்போன்று பேய் படம்
ஒன்றை ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளேன்,
அப்படத்தை நீங்கள் டைரக்ட் செய்தால்
நன்றாக இருக்கும் என்றார். திருச்செல்வம்
சொன்ன கதை வித்தியாசமாக இருந்தது,
விஞ்ஞானமும், மெய்ஞானமும் கலந்த கதை.
இயற்கையை நாம்
எவ்வளவு பாழ்படுத்துகிறோம்..? , அதனால்
பூமாதேவி எந்த
அளவிற்கு பாதிக்கப்படுகிறாள்
என்பதை ஆன்மீகம் மற்றும் அமானுஷ்ய
சக்திகள் போன்றவை கலந்த ஜனரஞ்சகப்
படைப்பாக இப்படத்தை எடுக்க உள்ளோம்.
காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட்
மற்றும் த்ரில்லிங்காக படம் கொடுக்கப்
போகிறோம். ஹாலிவுட் படம் என்றாலும்
நம்மூர் ஸ்டைலில் பாட்டும் இருக்கும்.
இப்படத்தில் பாலிவுட் நடிகை சோனம் கபூர்
ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் அனில்
கபூர், ஹாலிவுட் நடிகர் ஜான் ஒயிட்
உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
ஹீரோவுக்கான தேர்வு நடக்கிறது என்றார்.
இதனிடையே இப்படத்தில் விஜய் ஹீரோவாக
நடிக்க கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
இசைஞானி இளையராஜாவும், அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப் படத்துக்கு இசையமைக்க உள்ளார்கள்.இளையராஜா ஏற்கெனவே ரஜினி நடித்த ஹாலிவுட் படமான ப்ளட் ஸ்டோனுக்கு இசையமைத்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் அவர் பாடல்கள் பாடி இருந்தாலும், அப்பாவும் மகனும் இணைந்து ஒரு படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவா பாடல்கள் 21ம் திகதி வெளியாகிறது
Sunday, June 16, 2013
நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தலைவா திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் வருகிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வருகிற 21ம் திகதி வெளியாகவுள்ளது.
ஏனெனில் 22ம் திகதி விஜய்யின் பிறந்தநாள் வருவதால், ரசிகர்களுக்கு விருந்தாக முதல் நாளே பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் படமாக்கப்படும் ஜில்லா
Thursday, May 30, 2013
கொலிவுட்டில் தலைவா படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குனர் நேசன்
இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்கிறார் விஜய்.
விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தில் இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
டி.இமான் இசையமைப்பில், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அண்மையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடந்து முடிந்தது.
14 நாட்கள் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடக்கவிருக்கிறது.
இதில் விஜய் மற்றும் மோகன்லால் சம்பந்தபட்ட காட்சிகளை படமாக்க இருக்கின்றனர்.
பெரும்பாலான காட்சிகளை சென்னையில் படமாக்கி விட்டு வெளிநாடு செல்லவும் திட்டமிட்டிருக்கின்றனர்.
இதற்காக சென்னை ஸ்டுடியோவில் மதுரையைப் போன்று பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்துள்ளனர்.
அநேகமாக யூன் முதல் வாரத்தில் ஜில்லாவின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைவா தலைவா சரிதம் எழுது
Thursday, May 16, 2013

விஜய் தங்கையாகநிவேதா தாமஸ்
Wednesday, May 15, 2013

"தலைவா படத்துக்கு பின், "ஜில்லா என்ற படத்தில் நடிக்கிறார், விஜய். இதில், விஜய் தந்தையாக, பிரபல மலையாள நடிகர், மோகன் லால் நடிக்கிறார். இந்த படத்தில், விஜய்க்கு, தங்கை கேரக்டர் உண்டாம். இந்த தங்கை கேரக்டருக்கு, படத்தில் முக்கியமான ரோலாம். இதனால், இதில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை, நீண்ட நாட்களாக தேடி வந்தனர்.
நீண்ட தேடலுக்கு பின், தற்போது, மலையாளத்தில் பிரபலமான, நிவேதா தாமசை, விஜய் தங்கை கேரக்டரில் நடிக்க, ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர், சசி குமார் நடித்த, "போராளி படத்தில் நடித்தவர். இதில் நடிப்பது குறித்து, நிவேதா கூறுகையில், "இந்த படத்தில் என், நடிப்பு திறமையை வெளிப்படுத்த கூடிய அளவுக்கு, நல்ல கேரக்டர் கிடைத்துள்ளது. அண்ணனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும், பாசமான தங்கை கேரக்டரில் நடிக்கிறேன். இதற்கு பின், எனக்கு தமிழில், நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என, நம்புகிறேன்என்கிறார்,நிவேதா.

விஜய் கொடுத்த பாராட்டு! வியந்து போன தனுஷ்!

விஜய் டிவியின் ”விஜய் விருதுகள் 2013” வழங்கும் விழா நேற்று முந்தினம்(13.05.13) நடந்தது. பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்
கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், தனுஷ் என திரையுலகத்தைச் சார்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். விருது வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஷாருக்கானுக்கு செவாலியர் சிவாஜிகணேசன் விருது கமல் கையால், சிவாஜி அவர்களின் குடும்பத்தாரின் (பிரபு, விக்ரம் பிரபு)
முன்னிலையிலும், நடிகர் விஜய் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.
விருதை பெற்றுக்கொண்ட ஷாருக் கான் “தமிழ்த்திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி நடிகர்களான கமல்ஹாசனுடனும் (ஹே ராம்), ஜித்குமாருடனும்(அஷோகா) நான் நடித்தபோது பெருமகிழ்ச்சி கொண்டேன்.
மேலும் நான் கொல்கத்தா அணியின் உரிமையாளராக இருந்தாலும்
சென்னை அணிதான் எனது ஃபேவரெட் அணி” என்று கூற் ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றுக்கொண்டார்.
பிறகு ஃபேவரெட் ஆக்டர், பெஸ்ட் எண்டர்டெயினர் ஆகிய இரு விருதுகளையும் பெற்றுக்கொண்ட விஜய் பேசிய போது “எனக்கு இரண்டு விருதுகள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் என்னை விட சிறந்த நடிகர் என் முன் உட்கார்ந்திருக்கிறார்” என்று தனுஷை சுட்டிக்காட்டினார். மற்றொரு நடிகரை தன்னை விட சிறந்தவர் என்று மேடையில் பேசிய விஜய்யின் குணத்தைப் பாராட்டி நடிகர் தனுஷ் டுவிட்டரில் “ விஜய் சாரின் உயர்ந்த வார்த்தைகளுக்கு என் தனிப்பட்ட வணக்கம். ஆனால் என்றைக்கும் அவர் தான் சிறந்த, பெரிய நடிகர். எனக்கு இந்தமுறை இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்று ‘விஜய்
விருதுகள்’, மற்றொன்று ‘விஜய்’ சாரின் விருது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

விஜய் படத்திற்கு இசையமைக்க காரணம் தனுஷ் - அனிருத்!

ஆனால் இந்த ஹிட் 3 திரைப்படத்தைப்போல அனிருத்தை ஏமாற்றவில்லையாம். இன்று(13.05.13) நடந்த எதிர்நீச்சல் சக்சஸ் மீட்டில் பேசிய அனிருத் “ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷனில் உருவாகவிருக்கும் திரைப்படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம், தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படக்குழு அப்படியே இணையும் மற்றொரு படம் என 3 படங்கள் தற்போது கைவசம் இருக்கின்றன.
கொலவெறி பாடல் எனக்கு பெயர் வாங்கிக்கொடுத்தாலும், எதிர்நீச்சல் திரைப்படத்தில் எனக்கு கிடைத்த வெற்றி தான் எனக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது. எதிர்நீச்சல் தான் எனக்கு முதல்படம். எனக்கு இந்த வய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தனுஷுக்கு மிக்க நன்றி” என்று கூறியுள்ளார். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படத்தைத்தான் அனிருத் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

இளைய தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய்: இயக்குனர் விஜய்
Tuesday, May 14, 2013

13ம் திகதி மதுரையில் ஆரம்பமாகும் ஜில்லா
Friday, May 10, 2013
கொலிவுட்டில் தலைவா படத்திற்குப் பின்பு விஜய் நடிக்கவிருக்கும் படம் 'ஜில்லா'வை இயக்குனர் நேசன் இயக்குகிறார்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 13ம் திகதி மதுரையில் தொடங்குகிறது.
இதில் மோகன்லால், காஜல் அகர்வால் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கின்றன.
இம்மாதம் இறுதி வரை மதுரையில் படப்பிடிப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு யூன் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் நடக்கிறது. சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்கிறார்.
ஜில்லா படத்தில் விஜய் ஷக்தி என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார். படம் மதுரையை பின்னணியாக கொண்டு எடுக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஜில்லாவில் ஷக்தி என்ற பெயரில் விஜய்
Wednesday, May 8, 2013

சூப்பர்ஹிட்டான தலைவா ரீஸர்
Thursday, April 11, 2013
'துப்பாக்கி' வெற்றிக்குப் பின்பு விஜய், தலைவாவில் நடித்து வருவதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கிடையே பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
நாயகன் விஜய், இயக்குனர் ஏ.எல்.விஜய் முதன்முறையாக இணைந்திருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியாகி, தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் விருந்தாக ஜில்லா
Sunday, March 17, 2013
ஜில்லா படத்தில் விஜய், மோகன்லால் சேர்ந்து வரும் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை கவரும் என இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார். |

உண்மையான தலைவன் எங்கள் தளபதி
இளையதளபதி விஜய் எங்கு சென்றாலும் கூட்டம் வருது இயல்பு. மற்ற நடிகர்கள் செல்லும் விழாக்களுக்கு நூறு ரசிகர்கள் வருவார்கள் என்றால் விஜய் செல்லும் விழாக்களுக்கு ஆயிரம் பேர் வருவர். ஏனென்றால் அவருக்கு அத்தனை ரசிகர்கள் இருகின்றனர்.தமிழகத்தில் மட்டும் அல்ல மும்பையில் படபிடிப்பு நடந்தபோது அங்கேயும்கூட ரசிகர்கள் கூடினர் என்று இயக்குனர் முருகதாஸ் சொல்லியிருக்கிறார். அப்படி இருக்கையில் தமிழகத்தில் இத்தனைகூட்டம் வருவது இயல்பு.

ஜில்லா பட தொடக்க விழா (Photos 📷)
Monday, March 11, 2013
இளையதளபதி விஜய்யின் ஜில்லா படதொடக்க விழா பூஜையுடன் இன்று கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் தலைவா படம் வரும் மே மாதமளவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

அவுஸ்ரேலியா பறக்கும் தலைவா
Friday, March 8, 2013

தலைவா படக்குழு, மும்பையில் தனது படப்பிடிப்பை விரைவில் முடிக்க இருக்கிறது. |
இளைய தளபதி, அமலா பால் நடிக்கும் தலைவா படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் படத்தின் முக்கிய காட்சிகளை மும்பையில் அதிவிரைவாக எடுத்து முடித்து விட்டாராம். மீதியுள்ள காட்சிகளையும் எடுத்து விட்டு தலைவா படக்குழு அவுஸ்திரேலியா பறக்க இருக்கிறது. படத்தில் சத்யராஜ், ராஜிவ் பிள்ளை, சந்தானம், பொன் வண்ணன், அபிமன்யு சிங் மற்றும் இரண்டாவது நாயகியாக ராகினி என்ற வட நாட்டு பெண் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். |

விஜய்யுடன் நடிக்க அஸினுக்கு எதிர்ப்பு
Thursday, February 28, 2013
விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகை அசினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் நடிகர், நடிகைகள் யாரும் அந்நாட்டுக்கு செல்லக்கூடாது என்று திரையுலக கூட்டமைப்பு தடை விதித்தது.இதையடுத்து தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெறவில்லை. நடிகர், நடிகைகளும் இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டனர்.
சினிமா பின்னணி பாடகர்கள் பலர் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். தமிழ் அமைப்புகள் எதிர்ப்பால் அவர்களும் இசை கச்சேரியை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினர்.ஆனால் அசின் மட்டும் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடந்த ரெடி இந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதற்கு நடிகர் சங்க செயற்குழுவில் பேசிய சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் படங்களில் அசினை நடிக்க வைக்ககூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பியது.இதனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கும் புதுப்படத்தில் விஜய் ஜோடியாக அசின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அக்கட்சியின் சென்னை மண்டல செயலாளர் எஸ்.எஸ். சிவா வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு திரையுலகினரின் எதிர்ப்பை மீறி அசின் சென்று வந்தார்.பிரபாகரனின் மகனான சிறுவன் பாலச்சந்திரனை குரூரமாக கொன்றதன் மூலம் இலங்கையின் குரூர முகம் உலகுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் தமிழர்கள் மனம் புண்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் அசினை கே.வி. ஆனந்த் தனது படத்தில் நடிக்க வைப்பது தமிழர்களை மேலும் புண்படுத்துவதாக இருக்கும் என்றும் எனவே அசினை நடிக்க வைக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.

மீண்டும் முருகதாஸ்-விஜய் வெற்றிக்கூட்டணி
கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படம் வெற்றிகரமாக ஓடியது.ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனையும் படைத்துள்ளது.இதையடுத்து மீண்டும் புதுப்படத்தில் இருவரும் இணைகிறார்கள்.
விஜய்யை வைத்து திரும்பவும் படம் இயக்குவதை ஏ.ஆர். முருகதாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.இது குறித்து முருகதாஸ் கூறுகையில், நானும் விஜய்யும் சில தினங்களுக்கு முன் பேசினோம். அப்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.இந்த படம் ‘துப்பாக்கி’யின் இரண்டாம் பகுதியாக இருக்காது. ஆனால் வித்தியாசமான கதையாக இருக்கும் என்றார்.
‘துப்பாக்கி’ படத்தை முருகதாஸ் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் விஜய் பட வேலைகளை தொடங்குகிறார்.

மீண்டும் விஜய்-அசின்
Thursday, February 21, 2013
விஜய் நடிக்கவுள்ள புதிய படமொன்றின் மூலம் மீண்டும் கொலிவுட்டிற்கு வருகிறார் நடிகை அசின்.மீண்டும் விஜய்யுடன் அஸினை ஜோடி சேர வைக்கின்றார் கே.வி. ஆனந்த்.
‘மாற்றான்’ படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் அடுத்து ரஜினியை வைத்து ஒரு படத்தை டைரக்ட் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இப்போது அவர் விஜய்யை வைத்து ஒரு படம் டைரக்ட் செய்யப்போவதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தலைவா,ஜில்லா ஆகிய படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் இந்த புதிய படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
காவலன் படத்தின் வெற்றிக்குப் பிறகும் தமிழ்ப்பட வாய்ப்புகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருந்த அசின்
தற்போது இந்தப்படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி ஆகிறார்.
ஏற்கனவே ஏ.ஜி.எஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படத்தை டைரக்ட் செய்வதற்காக கே.வி. ஆனந்தினை ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால் கோச்சடையான் படத்திற்குப் பிறகு தான் சிறிது காலம் ஓய்வெடுக்கப்போவதாக ரஜினி சொல்லி விட்டதால்
இப்போது ரஜினிக்கு பதிலாக விஜய்யை செலக்ட் செய்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.

தலைவாவில் விஜய்க்கு வில்லனாக விஜய்
கொலிவுட்டில் இளையதளபதி விஜய் நடிக்கும் தலைவா படத்தின் இயக்குனர் பெயரும் விஜய் தான்.
இதையடுத்து பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸின் மகனான விஜய் ஜேசுதாஸ் இன்னொரு விஜய்யாக இப்படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் மோதும் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர் விஜய் யோசித்து வந்தபோது, பாடகர் விஜய் வில்லன் வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருப்பார் என்று அவரது உதவி இயக்குனர்கள் கருத்து சொன்னார்களாம்.
இதுகுறித்து விஜய் ஜேசுதாஸிடம் கேட்டுள்ளார் இயக்குனர் விஜய்.
அதற்கு விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னதும், என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்காமல் நடிப்பதற்கு சம்மதம் சொல்லி விட்டாராம் விஜய் ஜேசுதாஸ்.
அதையடுத்து நேரில் பேசிய போது தான் மொத்த கதையையும் சொல்லிவிட்டு, இந்த படத்தில் வருகிற வில்லன் வேடத்தில் தான் நீங்கள் நடிக்கப் போகிறீர்கள் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.
பின்னர் முன்பணம் பெற்ற விஜய் ஜேசுதாஸ், சண்டை காட்சிகளில் நடிப்பதற்காக தனது உடற்கட்டை மாற்றியிருக்கிறாராம்.
நடிகர் விஜய்யின் வழக்கமான சண்டை பயிற்சியாளர்களே விஜய் ஜேசுதாஸின் உடல்கட்டையும் பயற்சி கொடுத்து மாற்றியிருக்கிறார்களாம்.

ஓமானுக்கு பறக்கும் `தலைவா`
இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தலைவா படக்குழு விரைவில் வெளிநாடு ஒன்றில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவா படத்தில் விஜய், அமலா பால் நடிக்கின்றனர்.
ஜி.வியின் இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.
இந்நிலையில் சென்னை, மும்பையில் நடந்த படக்குழு விரைவில் அரேபிய நாடான ஓமன் பறக்கிறது.
அங்கு ஆக்ஷன் மற்றும் பாடல்களை படம்பிடிக்க உள்ளனர். இதற்கிடையே ஸ்பையின் நாட்டிற்கு தலைவா படக்குழு செல்கிறது என வெளியான தகவலை வதந்தி என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

துப்பக்கி 100வது நாள் வெற்றி
Wednesday, February 20, 2013
100வது நாளை கொண்டாடிய விஜய்யின் துப்பாக்கி. சமீபத்திய தமிழ் சினிமாக்களில் ஒரு படம் 25நாட்கள் ஓடுவதே குதிரை கொம்பாக இருக்கிற வேளையில் விஜய்யின் துப்பாக்கி படம் 100வது நாளை கொண்டாடி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் தீபாவளி விருந்தாக நவம்பர் 13ம் தேதி ரிலீஸ் ஆன படம் துப்பாக்கி.
ஸ்லீப்பர் செல் எனும் பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு விஜய்யாக, முற்றிலும் ஸ்டைலான விஜய்யாக துப்பாக்கி படம் காட்டியது. ஆரம்பத்தில் தலைப்பு பிரச்னை பின்னர் படம் ரிலீஸ் ஆன பின்னர் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு என்று சில பிரச்னைகளை சந்தித்த துப்பாக்கி படம் எதிர்ப்புகளையும் கடந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. சுமார் ரூ.70கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் இரண்டு வாரத்திலேயே ரூ.100கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது. மேலும் இதுநாள் வரை ரூ.200கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் ஆகியோரின் சினிமா கேரியரிலேயே துப்பாக்கி படம் தான் அதிக வசூலை கொடுத்த படம். துப்பாக்கி படம் இன்று(பிப்-21) 100வது நாளை கொண்டாடி உள்ளது. வசூல் ரீதியாக மட்டும் இல்லாமல், துப்பாக்கி படம் 100வது நாளையும் எட்டியுள்ளதால் இந்த 100வது நாளை ஒரு பெரிய விழாவாக எடுத்து கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இதில் துப்பாக்கி படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களையும் அழைத்து நினைவு பரிசு வழங்க இருக்கிறார் தாணு.
கடைசியாக விஜய் நடித்த காவலன், நண்பன், துப்பாக்கி போன்ற படங்கள் ஹிட் அடித்துள்ளதால் விஜய்யின் ரசிகர்கள் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவரது அடுத்த படத்தையும் ரொம்ப ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Subscribe to:
Posts (Atom)